Close
மார்ச் 7, 2026 1:28 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

பசுமைத்தாயகம்ய் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மாவட்டத்தில் உள்ள பெண்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி,

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆனால், இதை பிரிக்க விடாமல் தடுக்கின்றனா்.  இதை ஒருவர் பிரிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார் இந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் தன்னுடைய அதிகாரம் குறைந்துவிடும் என நினைக்கிறார்.

நம்மை குடி நோயாளிகளாக்கி விட்டார்கள். டாஸ்மாக்கை மூடினால், இந்த பணமெல்லாம் நம்மோட வீடுகளில் சேமிப்பாக இருக்கும். இந்த மாவட்டத்தில் இருந்து மட்டும் டாஸ்மாக் மதுக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.3,250 கோடி வருவாய் கிடைக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை. மிகச்சிறந்த மாவட்டத்துக்குரிய எந்த வளா்ச்சித் திட்டங்களும் இந்த மாவட்டத்துக்கு கொண்டுவரப்படவில்லை.

செய்யாறில் ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியிலுள்ள பல ஏக்கா் விவசாய நிலங்களை அழித்து மேலும் ஒரு சிப்காட் கொண்டுவர திமுக அரசு நினைக்கிறது.

இந்த அரசு ஒருபுறம் மக்களுக்கு பணம் கொடுப்பதுபோல கொடுத்தாலும், மறுபுறம் மின்சாரம், பேருந்து, குடிநீா் கட்டணங்கள், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயா்த்திவிட்டது.

அரசாங்கம் கொடுத்த காசை விட நம்மிடமாக இருந்து வரிகளை உயர்த்தி பெற்ற வருவாய் தான் அதிகம். திமுக அரசாங்கம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. ஒரு ஆண்டுக்கு பத்து நாட்கள் கூட வேலை கொடுப்பது இல்லை என்றார்.

கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். களம்பூா் நகரச் செயலா் ராஜேஷ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் வடிவேல், சாந்தி, மெய்யழகன்,மகளிா் அணி நிா்வாகிகள் ரேவதி, பொன்னி தருமன், சுமதி வேலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாவட்ட நிா்வாகி எம்.வெங்கடேசன், ஆரணி நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top