Close
மார்ச் 7, 2026 9:34 காலை

நாமக்கல்லில் ஹோலி திருவிழா: மாவட்ட காங். தலைவர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் கலந்துகொண்டு வட மாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற ஹோலி திருவிழா நிகழ்ச்சியில் மாவடட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் கலந்துகொணடு வடமாநில தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நாமக்கல் நகரில் ஹோலி பண்டிகை விழா நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில் நிகழ்ச்சிக்கு  தலைமை வகித்து பேசினார். அப்போது வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு சமூக நல்லினக்கத்தை ஏற்படும் வகையில் அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் இடையில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக அவர் தெரிவித்தார். திரளான பிரமுகர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top