Close
மார்ச் 16, 2026 11:32 காலை

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம்,

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகர, ஒன்றிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.குணசேகரன், திராவிடா் கழகம் மூா்த்தி, மதிமுக சீனி.காா்த்திகேயன், தேமுதிக மாவட்டச் செயலா் வி.எம்.நேரு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் திருமலை, விசிக நியூட்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் எ.வ.வேலு கண்டன உரை நிகழ்த்தினாா்.

பின்னா் பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எரிவாயு அடுப்பு இல்லாமல் உணவு தயாரிக்க முடியாது. பெரும்பான்மையான குடும்பங்கள் எரிவாயு பயன்படுத்துகிறாா்கள்.

இன்று எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதற்குக் காரணம் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தெளிவாக இல்லை. ரஷியாவில் உள்ள எண்ணெய் பொருள்களை வாங்க வேண்டும் என்றால் இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கேட்க வேண்டிய சூழலில் உள்ளது. இதனால்தான் தற்பொழுது எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் கிடைக்காததால் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. வீட்டிற்கு வழங்கக்கூடிய எரிவாயு சிலிண்டரின் முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொடா்ந்து ஒரு மாநில கட்சி ஆட்சி நடத்துவதை பாஜக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எரிவாயு தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனா் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா் .

ஆா்ப்பாட்டத்தில் மாநில தொமுச செயலா் சௌந்தரராசன், மாநகரச் செயலா் காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் சந்திரன், ரமணன், பகுதி பொறுப்பாளா்கள் விஜி (எ) விஜியராஜ்,  சீனுவாசன், புகழேந்தி, சண்முகம், ஷெரீப், மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top