புதுக்கோட்டை ரோஸ். பி.ஏ.எப் மற்றும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது .
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தை நிலையான வேளாண்மை மூலம் எதிர்கொள்ளல் என்ற நோக்கத்துடன் பாரம்பரிய உணவுகள் பாரம்பரிய நெல் வகைகள் சிறுதானியங்கள் ஆகியவற்றை முன் நிறுத்தி பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
பாரம்பரிய உணவு திருவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ரோஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆதப்பன் வரவேற்றார். விழாவிற்கு துணை இயக்குனர் அகிலா பாரதி தலைமை தாங்கினார். விழாவில் தாளான்மை உழவர் இயக்கம் பாமயன், எண்ணெய் மற்றும் அடுப்பில்லாத சமையல் குறித்து மாறன் ஜி , இயற்கை விவசாயம் குறித்து முன்னோடி விவசாயி தனபதி, முன்னாள் வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் வகைகள் ஒட்டடையான், வைகுண்டா. செங்கல்பட்டு சிறுகமணி. மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி , கருப்பு கவுனி, குதிரைவாலி, உள்ளிட்ட பலவகையான பாரம்பரிய நெல் வகைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் குதிரைவாலி பொங்கல், பசும்பால் மோர், குதிரைவாலி லட்டு, கவுனி கருப்பு உளுந்து கொழுக்கட்டை ,சீரக சம்பா கொழுக்கட்டை, கீரை சூப், திணை அல்வா, முளைகட்டிய தானியங்கள், சிறுதானிய குளோப்ஜாமூன் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகள் விவசாயிகள், இளையோர்கள். பெண்கள் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன

விழாவில் விவசாயிகளின் முக்கியத்துவம். இயற்கை விவசாயம், மூலிகைகள், பாரம்பரிய உணவு குறித்து நாடகம் வாயிலாகவும் நடனம் வாயிலாகவும் பாடல்கள் வாயிலாகவும் கவிதை வாயிலாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் பசுமை பாரம்பரியம் குறித்தும் குழந்தைகள் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் பொன்னமராவதி, குன்னண்டர் கோவில், அரிமளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ரோஸ் குழந்தைகள் மற்றும் இளையோர் அமைப்பு சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சூழலியலாளர் பாமயன் நம் பாரம்பரிய உணவு, நமக்கான உணவாக மட்டுமல்லாது மருந்தாகவும் செயல்பட்டது, ஆனால் தற்போதுள்ள பல்வேறு வகையான உணவுகள், நம்முடைய அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையாக அமைகிறது, நம்முடைய உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாக வைப்பதற்கு நம்முடைய பாரம்பாிய உணவுகளே அடிப்படையாக அமையும் என்றார்.

மாறன் ஜி பேசுகையில், மாத்திரை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கவே இந்த பாரம்பரிய உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கறிவேப்பிலை ஜூஸ் சாப்பிட்டால் இளம் நரை ஏற்படாது, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை குறைந்து விடும் என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் காலையில் எழுந்தவுடன் பழைய சோற்றில் உள்ள நீச்சல் தண்ணீரை பருக வேண்டும்.
வெள்ளை சீனியை பொதுமக்கள் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க நொறுங்க சாப்பிட வேண்டும் என்றும் செல்போன் பார்த்துக் கொண்டே சாப்பிடக்கூடாது என்றும் கருவேப்பிலை கசாயம், முள்ளங்கி சாறு, வாழைச்சாறு ஆகியவற்றை பருகினால் சிறுநீரகத்தில் எவ்வளவு பெரிய கல்லடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் எளிதில் அவற்றை அகற்றக் கூடிய வல்லமை உடையது என தெரிவித்தார்.
மேலும் நமது முன்னோர்கள் சொல்லி வைத்த பாட்டி வைத்தியத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அதற்கான நூல்களை வாங்கி படித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மாறன் ஜி கேட்டுக் கொண்டார்.
பாரம்பரிய உணவுத் திருவிழாவில் இயக்குநர்கள் மருதசாமி. இரகுபதி. சித்ரா. அரிமளம் நர்சரி கம்பெனி வேலாயுதம். அண்டக்குளம் கால்நடை உற்பத்தியாளர் நிறவ ஜீவானந்தம், பாரதி. உள்ளிட்ட 200க்கும் அதிகமான விவசாயிகளும் குழந்தைகளும் பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




