Close
செப்டம்பர் 10, 2026 2:47 மணி

உத்திரமேருரில் மறைந்த வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன தலைவர் மறைந்த த. வெள்ளையன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் ஆணைக்கிணங்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக, மாவட்ட தலைவர் ஐயப்பன்தாங்கல் எம். குமார் வழிகாட்டுதலின்படி, மாவட்ட செயலாளர் சந்தோஷ் தலைமையில் ஐயா வெள்ளையன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிர்வாகி ஏ.பி.சத்திரம் டைல்ஸ் பெருமாள் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு வெள்ளையன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானாருக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், வழக்கறிஞர் என பலரும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top