Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சபீர்பானு பங்கேற்று பேசினார்

தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை, பொன்னமராவதி வர்த்தகர் கழகம் மற்றும் முத்தமிழ்ப் பாசறை இணைந்து ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வர்த்தகர் கழக இணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கிராமிய பாடகர் வைகை பிரபா தமிழ் வாழ்த்துப் பாடலை பாடினார்.

கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சபீர்பானு பங்கேற்று, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தி, ஆட்சி மொழிச்சட்ட விளக்க உரையாற்றினார்.

முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர்கள் சந்திரன், வே.மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வணிகர்களுக்கு வணிகர் பயன்பாட்டு சொல்ல கராதி வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அரிமா சங்கத்தலைவர்கள் நாகராஜன், சுந்தர்ராஜன், முருகானந்தம், ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கத்தலைவர் மலைச்சாமி, அரிமா சங்க மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சித்துறை உதவியாளர் சுப்புராம் மற்றும் வர்த்தகர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top