Close
செப்டம்பர் 19, 2024 7:09 மணி

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி படிக்கப்பட்டது.

பகுத்தறிவு பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17 ந்தேதி தமிழக அரசின் சார்பில் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழகம் முழுவதும்  தந்தை பெரியார் பிறந்த தினம் நாளை வருவதால், நாளை மீலாடி நபி அரசு விடுமுறை நாள் என்பதால் இன்றே அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாளையொட்டி உறுதி மொழி எடுக்கும் நிழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில்  இன்று 16. 9. 2014 சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா  முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மேயர் அன்பழகன் சமூக நீதி நாள் உறுதிமொழியை படிக்க அதனை அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரும்ப படித்து உறுதி எடுத்துக்கொண்டனர்.

துணை ஆணையர் கே. பாலு , நகர் நல அலுவலர் மணிவண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ,பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top