Close
மார்ச் 7, 2026 12:06 மணி

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்லல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட அரசு மன நல டாக்டர் பிரஷாந்தினி பேசினார்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மன நல திட்ட சிறப்பு நிபுணர் பிரஷாந்தினி கலந்துகொண்டு, இளைய தலைமுறையை பெரிதும் பாதிக்கும் போதைப் பொருள் பழக்கவழக்கத்தின் தீவிர விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குறிப்பாக, போதைப் பொருளின் தாக்கத்தால் உருவாகும் உடல்நலக் குறைபாடுகள், மனநலப் பாதிப்புகள், மற்றும் இதன் காரணமாக ஏற்படும் சமூக, குடும்ப சிக்கல்கள் குறித்து விரிவாக பேசினார். போதைப் பொருள் பழக்கம் ஒரு தனிநபரின் வாழ்க்கையை மட்டுமன்றி, ஒரு குடும்பத்தையும் சமூகத்தையும் அழிவின் பாதையில் இட்டுச்செல்லக்கூடிய ஆபத்தான ஒன்றாகும். மாணவர்கள் இந்த ஆபத்தான பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான, பொறுப்புள்ள வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த ராஜ்கமல் மாணவர்களிடம் புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாடு, உடல்நலம், மனநலம் மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தீவிரமான பாதிப்புகள் குறித்து விரிவாக பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ்கண்ணன் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top