Close
மார்ச் 7, 2026 12:06 மணி

நாமக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா

நாமக்கல் எஸ்.பி.எம் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழக அரசின் காலை உணவுத்திட்டத்தை, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.

நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழகத்தில் ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிக முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, திருச்சி ரோட்டில் உள்ள எஸ்.பி.எம் அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது.

நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் உட்கார்ந்து உணவு உண்டனர்.

மாநகராட்சி துணை மேயர் பூபதி, கவுன்சிலர்கள் சரோஜா, கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன், கமிஷனர் சிவக்குமார், திமுக நிர்வாகிகள் பாண்டியன், பால்ரவி, உமாசங்கர் பள்ளி தாளாளர் டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top