Close
ஏப்ரல் 2, 2025 11:53 காலை

பர்தா அணியத்தடை: கர்நாடக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

கர்நாடகா அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத்ஜமாத் அமைப்பினர்

கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் ஹஜாப் எனும் பர்தா அணிவதை தடைவிதித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை யில் தவ்ஹீத் ஜமாத்  சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக பாஜக அரசு மத சம்பிரதாயங்களில் தலையிடு வதை இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிவதற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

 புதுக்கோட்டையில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர்  பா.அப்துல் ரஹ்மான்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டத்தின் போது,  மத பழக்கவழக்கங் களில் அரசியலமைப்பு கொடுத்துள்ள உரிமையை பறிக்கும் வகையில் மாணவிகள் பர்தா அணிவதை தடைசெய்துள்ள கர்நாடக பாஜக அரசை கண்டித்தும், ஹிஜாப் எனும் பர்தா அணிவதற்கான தடையை உடனடியாக ரத்து செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top