Close
ஏப்ரல் 24, 2026 12:51 காலை

அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா முதலாண்டு நினைவு நாள்: கராத்தே, சிலம்பப் போட்டிகள்

புதுக்கோட்டை

பேக்கரி சீனுசின்னப்பாக நினைவு நாளை யொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த சான்னறோர்கள்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக நான்காம் நாள் நிகழ்வாக கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் நடைபெற்றது.

புத்தாஸ் வீரக்கலை கழகம், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , ஆத்மா அகாடமி இணைந்து நடத்திய
இப்போட்டியில் தலைமை விருந்தினராக ரோட்டரி மாவட்டம் – 3000தின் மேனாள் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம்,  சிறப்பு விருந்தினர்களாக அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தின் உடல்கல்வி துறை தலைவர் முனைவர் கே.ஏ. ரமேஷ்,

சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட பார்கவுன்சில் பொருளாளர் சுரேஷ்குமார், கவிஞர் பீர்முகமது, புத்தாஸ் பெற்றோர் பயிற்சியாளர் கழக தலைவர் அஸ்வின்குமார் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

புதுக்கோட்டை
பேக்கரி சீனு சின்னப்பா நினைவு நாளையொட்டி நடைபெற்ற கராத்தே போட்டி

சமூக சேவகர் காடுவெட்டியார் குமார், மருந்துவர் சிவபிரகாஷ் ஆகியோர் சிறப்ப விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் நிறுவனர் சேது. கார்த்திகேயன், மாஸ்டர் சண்முகம்,ஆத்மா அகாடமி நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி ஆசிரியர்கள், நடுவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட 320 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர்.

முன்னதாக அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் உருவப்படத்திற்கு கலந்துகொண்ட அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top