Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நீதி மன்ற விசாரணை: ஒரேநாளில் 1168 வழக்குகள் தீர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த லோக் அதாலத் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல்காதர்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டு தலின்படி, (26.06.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம்“லோக அதாலத்” நடைபெற்றது.

இந்த லோக் அதலாத்திற்கு தலைவர் முதன்மைமாவட்ட நீதிபதி  ஏ. அப்துல்காதர் தலைமை  வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி  வசந்தி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர்/பொ/முதன்மை சார்பு நீதிபதி சி.சசிக்குமார் , குற்றவியல் நீதித்துறை நடுவர்  ஸ்ரீநாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர்  ரேவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  பூர்ணிமா  ஆகிய நீதிபதிகள் கொண்ட மூன்று அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற அமர்வுகள் நான்கு என மொத்தம் ஏழு அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.

நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வாகன விபத்து இழப்பீடு, செக்மோசடி மற்றும் வங்கி வராக் கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 1168- வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு சுமார் ரூ.13,70,29,369/ தொகைக்கான சமரச முடிவு ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top