நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது.
28ம் தேதி முதல் வரும் 31ம் தேதி தேதி வரை 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 34 முதல் 35 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 23 டிகிரி முதல் 25 டிகிரி சென்டிகிரேட் வரை இருக்கும்.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 50 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்று மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 12 முதல் 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இன்று ஆக. 28ம் தேதி 3 மி.மீ., 29ம் தேதி 3 மி.மீ., 30ம் தேதி 6 மி.மீ., 31ம் தேதி 1 மி.மீ. அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




