Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

புதுக்கோட்டை

நம்ம ஊரு சூப்பரு திட்ட ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் திட, திரவக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல் தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் இணை இயக்குநர், திட்ட இயக்குநர், ஊரக வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை ஆகியோர் தலைமையில்  மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித் திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்), அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரப்படுத்துவது.

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியோர்களுக்கு பிரசாரம் தொடர்பாக பயிற்சி அளித்திடவும், அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் பங்கு கொண்டு, அது தொடர்பான அறிக்கைகளை தினசரி வழங்கிட தெரிவிக்கப்பட்டது.

பிரசாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் இருப்பார். அவருக்கு உறுதுணையாக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவித் திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஆகியோர் இருப்பார்கள்.

அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ‘நம்ம ஊரு சூப்பரு” பிரசாரம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top