Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

காந்தியத் திருவிழா 2022: காந்தி பேரவை சார்பில் புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் காந்தி பேரவை சார்பில் நடைபெற்ற உறதி ஏற்ற நிகழ்வு

காந்தியத் திருவிழா 2022  முன்னிட்டு புதுகையில் காந்திப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் ஆகிய போட்டிகளுக்கான இறுதி சுற்றுப் போட்டி 03.09.2022  நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு

புதுகையில் அகில இந்திய மகாத்மா காந்தி ஈமூக நலப் பேரவை சார்பில், காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் போன்ற போட்டிகளுக்கான இறுதி சுற்றுப் போட்டி 03.09.2022 அன்று நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 700 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்றைய இறுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு,கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறது. இவ்வாண்டு மாணவர்களின்ஒன்றுமையை மேம்படுத்தும் விதமாக குழு நடனம் மற்றும் குழு நாட்டியம் போன்ற போட்டிகளும்நடைபெற்றது.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்திப் பேரவை சார்பில் நடைபெறும் காந்தியத் திருவிழா 2022 முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானபல்வேறுபோட்டிகள் புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் புதுக்கோட்டை – திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டத்தைச் சார்த்த 70 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
புதுகை ராணியார் அரசு பள்ளியில் நடந்த காந்திய திருவிழா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

போட்டிகளை பேரவையின் தலைவர் முனைவர்.வைர்.ந. தினகரன் தொடங்கி வைத்தார். பேரவை மாவட்ட இளைஞர் மன்ற அமைப்பாளர் மாணிக்கம் வரவேற்றார். மருத்துவர் ராமதாஸ் மற்றும் ராணியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி  ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து, பாராட்டிப் பேசினர்..

பேரவை நிரவாகி நமச்சிவாயம் மாணவர்களுக்கு உறுதி மொழி ஏற்கச் செய்தார்.  மருத்துவர்  டி.எஸ். ராமமூர்த்தி, நிலவை பழனியப்பன், பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

போட்டியின் நடுவர்களாக பீரமுகமது, பழனிச்சாமி, சங்கமித்ரா, ஜெயா, கீதா, செல்வம், சண்முகம், இசை ஆசிரியர்கள் கண்ணன், சரவணன், சௌமியா, மைதிலி, நிர்மலா, தேவகி, சதாசினம், குமார், ரமேஷ், ஆரோக்கியசாமி, சரவணன், வீரமுத்து, ஓவியர் தனபாலகிருஷ்ணன், நாட்டிய ஆசிரியர்கள் முத்துக்குமார், கிருபா, சங்கீதா, கோகிலா, கலைமாமணி சத்தியபாலன், கலைநன்மணி கலைச்செல்வி இருந்து சிறப்பித்தனர். காந்தீப் பேரவையின் இளைஞர் மன்ற உறுப்பினரகள் மற்றும் பேரவை நிர்வகிகள் விழாவினை ஒருங்கிணைத்தனர். இறுதியாக பேரவை தலைமை நிலைய செயலாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.

மாறுவேடப்போட்டி : காந்தி வேடம் மட்டும் இந்த போட்டி மட்டும் 02-10-19 அன்று காலை 9 மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறும் இதில் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் 02-10-2022 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் மாலை 3.00 மணிக்கு வழங்கப்படும் என்று பேரவையின் நிறுவனர் வைரத, தினகரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top