Close
செப்டம்பர் 20, 2024 7:32 காலை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி  விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில்  ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு மற்றும்  மலர்பூஜை செய்து  தீபாராதனை  நடைபெற்றது பூஜையில்   கல்வி உபகரணங்கள் இசைக்கருவிகள் பாடப்புத்தகங்கள் வைத்து சிறப்பு வழிபாடுசெய்யப்பட்டது .

ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் பற்றி   கே.மணி குருக்கள்  பேசியதாவது:  ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மையானவர்,  சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவரை உபாசிக்கிறேன்’ என்பது பொருள்.கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். ஸ்ரீஹயக்ரீவரை விரதமிருந்து மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.
குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும்.. ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும்.
அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார் என்று குறிப்பிட்டார்.
பக்தர்கள்  அனைவருக்கும்  அனுமன் திருச்சபையினர் சார்பில் பிரசாதம்   வழங்கப்பட்டது.
நிகழ்வில், பேராசிரியர் நாகேஸ்வரன்  கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும்  கல்லூரி   மாணவ, மாணவிகளின்  பெற்றோர்கள்  கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர்ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள்சிறப்பாக  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top