Close
செப்டம்பர் 19, 2024 7:05 மணி

புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டம் நடைபெற்றது.                                                                                                                                                        புதுக்கோட்டை   மா. மன்னர்  கல்லூரியில் நடைபெற்ற  முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு  கூட்டத்துக்கு  கல்லூரி முதல்வர்  முனைவர் திருச்செல்வம்  தலைமை   வகித்தார். பேராசிரியர் முனைவர் கணேசன்  அனைவரையும் வரவேற்று,  ஆண்டறிக்கை  வாசித்தார்.

முனைவர் ஜீவானந்தம்  சங்க வரவு – செலவு  அறிக்கையை   வாசித்தார்.  கல்லூரி வளர்ச்சியில்  முன்னாள் மாணவர்  சங்க த்தின் பங்கு  பற்றி விவாதிக்கப்பட்டது.

பின்னர்  சங்கத்திற்கு புதிய   நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  ரா. சம்பத்குமார்  தலைவராகவும்,  முனைவர் கணேசன்  செயலாளராகவும், முனைவர்  ஜீவானந்தம் பொருளாளராகவும், வழக்கறிஞர்  ஏ. சந்திரசேகரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும்,  அருணாச்சலம் மற்றும் பேராசிரியர் முருகையன்  இணைச்செயலர்களாகவும்,  செயற்குழு உறுப்பினர்களாக   வழக்கறிஞர்கள்   முருகேசன், ரவிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன், சிவா,  செல்லதுரை,  திருப்பதி,   அய்யாத்துரை,    நாங்கராஜன்.

முனைவர்  கரு. பாலசுப்ரமணியன், முனைவர்  ரவிச்சந்திரன், முனைவர்   காந்தி, முனைவர்  கர்ணன், முனைவர் அழகுமணி, முனைவர், சத்ருசங்காரவேல்சாமி, முனைவர்  சரவணன், முனைவர்  தெய்வராஜ், முனைவர் புவனேஸ்வரி (கலைஞர் கருணாநிதி   அரசு கலைக் கல்லூரி முதல்வர்) மற்றும் முனைவர்  கலைச்செல்வி ஆகியோர்   தேர்வு   செய்யப்பட்டனர்.

முன்னாள்  மாணவர் சங்கத் தலைவர்  பேராசிரியர்   பழனியப்பன், செயலர் முனைவர்  கணேசன், பொருளாளர் முனைவர்  ஜீவானந்தம்  மற்றும் முன்னாள் மாணவர்கள்  பலர் கலந்து  கொண்டனர். பேராசிரியர்  முருகையன்  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top