Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

புதுக்கோட்டை நகராட்சியில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற ஆயுத பூஜை

புதுக்கோட்டை நகராட்சியில்  வாகன ஓட்டுனர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நகராட்சி ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்கு வாழைமரம் பூ சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்டு பின்னர் அனைத்து வகையான பழங்கள், பொரி கடலை மற்றும் தங்களுடைய வாகனங்களின் சாவிகளை ஒரே இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி ஆயுத பூஜையை கொண்டாடினர்.

தங்கள் வாகனங்களுக்கு சூடம் காண்பித்து தேங்காய் மற்றும் பூசணிக்காய் சுற்றி உடைத்தனர். இதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களை ஓட்டுநர்கள் எடுத்துச் சென்றனர். விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதிசெந்தில், நகர் மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, நகராட்சி ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top