Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

மணமேல்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

புதுக்கோட்டை

மணமேல்குடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் பங்கேற்றோர்

மணமேல்குடியில் மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்திசமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஈசிஆர் சாலையில் செவ்வாய்க்கிழமை  மாலை 5 மணி அளவில் திராவிடர் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள்தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில்ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக,மணமேல்குடி கிழக்கு கடற்கரை  சாலையில் மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தினார்கள். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைகோத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top