Close
செப்டம்பர் 19, 2024 11:14 மணி

மதுரை ஐடி நிறுவன ஊழியர் மாடியிலிருந்து விழுந்து மரணம்: போலீஸார் விசாரணை

மதுரை

மதுரையில் ஐடி நிறுவன ஊழியர் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம்

மதுரையிலுள்ள ஐடி நிறுவனத்தில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி நிறுவன  ஊழியர் உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தை சேர்ந்த மார்கண்டன் மகன் தினேஷ்(30). இவர் மதுரை  மாட்டுத் தாவணி அருகே பாண்டி கோவில் சாலையில் உள்ள  ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் நான்காவது மாடியில் இருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அண்ணன் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷின் மரணத்துக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top