Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

திமுக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமமுகவினர்

புதுக்கோட்டை ஒருங்கிணைத்த  மாவட்ட அமமுக  சார்பில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ஓ.கார்த்திக் பிரபாகரன், மத்திய மாவட்ட அமமுக செயலாளர் ஏ.வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில்,  மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து  கண்டன  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அமைப்பு செயலாளர்கள், மாநில  நிர்வாகிகள், நகர செயலாளர்கள், ஒன்றிய  செயலாளர்கள், மகளிர் அணியினர், மாவட்ட நிர்வாகிகள்,  ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூர்  நிர்வாகிகள், ஊராட்சி  நிர்வாகிகள், வட்ட  நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top