Close
செப்டம்பர் 20, 2024 6:32 காலை

குன்றாண்டார்கோவில் பகுதியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி: முதல்வருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ- எம். சின்னத்துரை

 புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கூட்டுறவு கலைஇ அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வாயிலாக எம்.சின்னதுரை சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய ஒன்றியங்களில் குன்றாண்டார்கோவிலும் ஒன்று. இங்குள்ள ஏழைஇ எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளியூர்களுக்குச் சென்று உயர்கல்வி பெறுவதற்கு அவர்களின் பொருளாதாரம் இடம் தருவதில்லை. இந்தப் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியோ வேறு எந்த அரசு கல்வி நிறுவனங்களோ கிடையாது. எனவே, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்துள்ள குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டும்.

கீரனூர் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறைதான் பெரும்பாலான நாட்கள் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. எனவேஇ இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தனியாக பைப் லைன் அமைத்து வினியோகம் செய்ய வேண்டும்.

கீரனூரில் தற்பொழுது உள்ள பேருந்து நிலையம் போதிய இடவசதியின்றி உள்ளது. மேலும், பெரும்பாலான பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகச் சென்றுவிடுவதால் கீரனூரைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கீரனூரையொட்டி செல்லும் புறவழிச்சாலையிலேயே புதிய பேருந்து நிலையம் அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top