Close
செப்டம்பர் 20, 2024 9:54 காலை

கட்டண உயர்வைக்கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசுக்கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு புதிதாக உயர்த்தப்பட்டுள்ள 15 விதமான கட்டண உயர்வுக ளைக் கண்டித்து கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பருவத்தேர்வு,  கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவக் கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், செய்முறைத் தேர்வுக் கட்டணம், கல்லூரி விடுப்பு கட்டணம் உள்ளிட்ட 15 விதமான கட்டணங் களை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளதாக கூறப்ப டுகிறது.

இக்கட்டண உயர்வுகளைக் கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கறம் பக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைச் செயலாளர் அ.அன்பரசன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலாஜி, பிரியங்கா உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top