Close
செப்டம்பர் 20, 2024 3:38 காலை

புதுகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கூடுதல் கட்டணத்தை திரும்பத் தராததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

புதுக்கோட்டை

புதுகை கேகேசி அரசு கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பத் தராததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்மடை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை திரும்பச் செலுத்தி விடுவதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் திரும்பச் செலுத்தாதால் திங்கள் கிழமை மாணவிகள் மீண்டும் வகுப்பைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நகரத் தலைவர் எஸ்.மகாலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைத் தலைவர்கள் கார்த்திகாதேவி, வசந்தகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top