Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

புதுக்கோட்டையில் நடந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா நிறைவு

புதுக்கோட்டை

விழாவில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கத்தில் நடைபெற்று வந்த 7-ஆவது உலகத் திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் நிறைவு  பெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா அக்.14 முதல் 18 வரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கத்தில் நடைபெற்றது. 5 நாட்களும் 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும் திரைப்பட இயக்குநர்கள் சசி, பாண்டிராஜ், காளி வெங்கட், வினோத்ராஜ், பிரம்மா, தமிழ், எடிட்டர் லெனின், ஒளிப்பதிவாளர் விக்னேஷ் குமுளை ஆகியோருடன் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆர்.நீலா, ஓவியர் ஸ்ரீரசா, திரைக்கலைஞர் கா.பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலைந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது பார்வையாளர்களுக்கு உலகத் திரைப்படங்கள் குறித்த பார்வையை மேம்படுத்துவதாக அமைந்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, ஜீவி, மருத்துவர் ஜெயராமன், கவிஞர் ரமா ராமநாதன் உள்ளிட்டேர் பேசினர். விழாவில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

விழாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் திரைப்படங்களை திரையிட்டும், திரை ஆளுமைகளை அழைத்துவந்து விழா எடுத்தும், உலகத் திரைப்படங்கள் குறித்து ஏராளமான கட்டுரை நூல்களை எழுதியும் உலகத் திரைப்பட விழா குறித்து விசாலமான பார்வையை மக்களிடம் கொண்டு சென்றதற்காக புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ கௌரவிக்கப்பட்டார்.

முன்னதாக மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் வரவேற்றார். பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top