Close
செப்டம்பர் 20, 2024 7:35 காலை

அக்.27-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கேலோ இந்தியா வாலிபால் லீக் தேர்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கேலோ இந்தியா வாலிபால் லீக் தேர்வுகள் வரும் 27 -ல்நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கேலோ இந்தியா வாலிபால் லீக் தேர்வுகள் 27.10.2022 -ல் நடைபெறவுள்ளது.

2022-2023 -ஆம் ஆண்டிற்கு கேலோ இந்தியா (U-19) ஜூனியர் மகளிர் வாலிபால் லீக் 2022 நவம்பர் 2 முதல் நவம்பர் 6 வரை இமாச்சலப்பிரதேசத்தின் ரோஹரு, ஷிம்லாவில் உள்ள உள் வாலிபால் விளையாட்டரங்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்;டுள்ளது.

அதனை தொடர்ந்து 27.10.2022 அன்று காலை 7.00 மணிக்கு வாலிபால் லீக் மாநில அணி தேர்வுகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆர்வமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் 01.01.2004- ம் ஆண்டு அன்றோ, அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும் எனவும், கீழ்காணும் சான்றுகளை கட்டாயம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தகுதியான ஆவணங்கள், ஆதார் அட்டை அல்லது பாஸ்போட், மெட்ரிகுலேட் சான்றுகள், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீராங்கனைகள் கல்வி பயில்வதற்கான பள்ளி-கல்லூரி (School Bonafide Certificate) ஆகும்.

மாநில அளவிலான தேர்வுகளில் கலந்து கொள்ளும் பங்கேற் பாளர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவைகள் வழங்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் 28.10.2022 அன்று முதல் தொடங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாலிபால் லீக் விளையாட்டுப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் விருப்பமுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுடன் 27.10.2022 அன்று காலை 7.00 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் மேலாளரிடம் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top