Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள்…

புதுக்கோட்டை

மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏழு திட்டங்கள்

மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய ஏழு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்.  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை அரசாணையின்  படி பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-2022 -ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு  40% மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு  60%  மானியமும் கூடிய ஏழு புதிய திட்டங்கள்  செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் விவரம் வருமாறு: உயிர் கூழ்ம திரள் (Bio Floc)  குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் வெட்டுதல் மற்றும் புதியதாக கட்டப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும், புறக்கடை- கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் 2 அலகிற்கும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், மீன் விற்பனை குளிரூட்டப்பட்ட வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 அலகிற்கும், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் 1.5 ஹெக்டேருக்கும், சிறிய அளவிலான உயிர் கூழ்ம திரள் (Bio Floc) குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 அலகிற்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற் கேற்ற வாறு திட்டவழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத் திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்) இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு,  மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-2019 முதல் 2020-2021 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய,மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 15.11.2022-க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்கலாம்.

மேலும் அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர்நலத் துறை உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233ஃ1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268 ஆகும் என மாவட்ட ஆட்சியர்  தகவல்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top