Close
செப்டம்பர் 20, 2024 7:29 காலை

புதுக்கோட்டை  சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, முருகப்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும் , போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சந்நிதி முன்பு எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு சூரசம்ஹார லீலை சிறப்பாக நடைபெற்றது

நிகழ்வில், அசுரனான பத்மாசூரன் சிங்கமுகமாகவும் , ஆட்டுத் தலையாகவும், மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருகப்பெருமான சம்ஹாரம் செய்த நிகழ்வை அங்கு கூடியிருந்த  பக்தர்கள்  அரோகரா கோஷம் முழங்கிட தரிசனம் செய்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top