Close
செப்டம்பர் 20, 2024 6:35 காலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

விருதுநகர்

காரியாபட்டி அருகே பள்ளியில் நடைபெற்ற நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்ற மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம் 7 நாட்கள் நடைபெற்றது. முகாம் துவக்க விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார்.

முகாம் அமைப்பாளர் திருமால் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில், மாணவர்கள் தேனூர் கிராமத்தில் பொது இடங்கள், கோவில் மற்றும் பள்ளிக் கட்டிட பகுதியில் தூய்மை பணி செய்தனர் . சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நட்டனர்.

முகாமில், இலவச பொது மருத்துவ முகாம், யோகா சிறப்பு பயிற்சி, போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தொடர்ந்து 7 நாட்கள் கிராமத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்த பள்ளி மாணவர்களை கிராம மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top