Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டு ஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டம்

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 4 -வது நாளாக மேற்கொண்டு வரும் முற்றுகைப் போராட்டம்

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டுஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் நிலையில், போராட்டக்களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் இடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து கடந்த 31 -ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 8 மணிக்கு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கும் ஒப்பந்த பணியாளர்கள் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 -ஆவது நாளாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்கள் போராட்ட களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். இதற்காக பெரிய  பாத்திரத்தைக் கொண்டுவந்து  தக்காளி சாதம் சமைத்து சாப்பிட்டனர்.

இன்றும் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள்மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 300 பணியாளர்களும் பங்கேற்றுள்ளதால் மாநகர் பகுதியில்  4 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன.

இதனால் தெருக்கள், சாலையோரம் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. வீடுகளில் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக்களில் வீசி சென்று விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இதுவரை 280 டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டவுன் டிஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top