Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

சிவகிரி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் தொழிலதிபர் சாவு

ஈரோடு

சிவகிரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் மீட்கப்பட்ட கார்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ் (40) .இவர் தனது மனைவி அபிநயா  மகன், மகளுடன் சிவகிரி அருகே சிலுவம்பாளையத்தில் வசித்து வருகிறார் இந்த நிலையில் நேற்றிரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது காரில் வீடு திரும்பும் பொது சிலுவம்பாளையம் என்ற இடத்தில் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வெளியேற முடியாத சதீஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்..இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top