Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா

ஈரோடு

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 34 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் முனைவர் கே.சங்கர நாராயணசாமி பங்கேற்று,  2021 -ஆம் ஆண்டு இக்கல்லூரியில் படிப்பை முடித்த  2,273 இளங்கலை மற்றும் 382 முதுகலை பட்டதாரிகள் என 2,655 பேருக்கு பட்டங்களை வழங்கினார் வாழ்த்திப் பேசினார்.

மேலும் படிப்பில் சிறந்து விளங்கி உயர் தரம் பெற்ற 132 பேருக்கு பதக்கங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஆர்.குமாரசாமி, அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் பி.சி.பழனிசாமி.

பி.சச்சிதானந்தன், ஆர்.எம்.தேவராஜா, டாக்டர் கே.செங்கோட்டுவேலன், ஆர்.பாலகிருஷ்ணன், கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வீ.பாலுசாமி மற்றும் கல்லூரியின் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கள், துறைகளின் தலைவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top