Close
செப்டம்பர் 20, 2024 5:57 காலை

மக்கள் நீதிமன்றம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 921 வழக்குகளில் 8.78 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை

லோக் அதலாத் விசாரணையை தொடக்கி வைத்த மாவட்ட நீதிபதி ஏ. அப்துல்காதர்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி,  சனிக்கிழமை  (12.11.2022) புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் ) நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி ஏ. அப்துல்காதர்  தலைமை வகித்து, விசாரணையை தொடக்கி வைத்தார்.

இதிவ், வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மனுதாரரின் குடும்பத்திற்கு, ஸ்ரீ ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம், இழப்பீட்டு தொகையாக ரூ.70,00,000/- (ரூபாய் எழுபது இலட்சம்) லோக் அதலாத் மூலம் சமரசமாக பேசிமுடிக்கப் பட்டு, அதற்கான உத்தரவை முதன்மை மாவட்ட நீதிபதி  வழங்கினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதி மன்ற விசாரணையில் பங்கேற்ற மக்கள்

மேலும், அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி  பாபுலால், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர்(பொ)/முதன்மை சார்பு நீதிபதி சி.சசிக்குமார் , குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1  ஜெயந்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2  ஸ்ரீநாத், கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர்  ரேவதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா  ஆகிய நீதிபதிகள் கொண்ட மூன்று அமர்வுகள்.

தாலுகா நீதிமன்றங்களில் ஐந்து அமர்வுகள் என மொத்தம் 8 அமர்வுகளில் நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, செக்மோசடி மற்றும் வங்கி வராக் கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம்  921 – வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 8,78,11,125 – தொகைக்கான சமரசம் செய்யப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top