Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதுக்கோட்டையில் ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பாபா பதிப்பகத்தின் வெளியீடான”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில்  ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டையில் பாபா பதிப்பகத்தின் வெளியீடான  உன்னதபுரம் கிழக்கு நூல் வெளியீட்டுவிழா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூகப் நலப் பேரவையின் நிறுவனரும் பாபா பதிப்பக உரிமையாளருமான முனைவர் வைர.ந.தினகரன் தலைமை வகித்தார்.

சமூக செயற்பாட்டாளர் மு.வேதரெத்தினம் வரவேற்புரை யாற்றினார்.  நகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்  நூலை வெளியிட்டார். அரசம்பட்டி ஒளவையார் தொடக்கப் பள்ளி தாளாளர் அ.ஆனந்தன், தமிழ் தேசிய வாதி துரை.மதிவாணன், கம்பன்கழகச் செயலாளர் ரா.சம்பத்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஓய்வு பெற்ற துணைஆட்சியர் எஸ்.எம்.சுரேஷ், ஓய்வுபெற்ற பதிவுத்துறை உதவித்தலைவர் இரா.இராஜேந்திரசிங் நூல் அறிமுகம் செய்தனர். ஓய்வு பெற்ற மாவட்டவருவாய் அலுவலர்கள் சி.கிருஷ்ணமூர்த்தி, மு.முத்தையா, ஜெ.சண்முகம்  ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் என்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியரும் ஓய்வு பெற்ற துணைஆட்சியருமான எஸ்.மோகன்ராஜ் ஏற்புரை வழங்கினார் கு.நாராயணசாமி நன்றியுரையாற்றினார்.  விழாவில் மருத்துவர் ந.ஜெயராமன், எழுத்தாளர்கள் கே.டி. கந்தசாமி,மு.கண்ணன்,காந்திப் பேரவை மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் புலவர் ம.ஜெயா, கவிஞர்பீர்முகமது, கலை இலக்கியபெருமன்றம் மூட்டாம்பட்டி ராஜு, வெங்கடேசன் ,தமிழ் தேசியவாதி நாதன் மற்றும் இலக்கிய வட்டத்தினர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top