Close
செப்டம்பர் 20, 2024 7:24 காலை

புதுகையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டுவிழா போட்டிகள்

புதுக்கோட்டை

புதுகை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா பள்ளியில் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா நூற்றாண்டு விழா போட்டிகள் நடைபெற்றது

புதுக்கோட்டையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின்
நூற்றாண்டு விழா போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ. வள்ளிப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு அழ.வள்ளியப்பாவின்  பாடல் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளில் இருபதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சோலச்சி, பழனிச்சாமி, ரமேஷ்மைதிலி, கீதாஞ்சலிமஞ்சன், ரேவதி, கவிஞர்கள் பீர் முகமது, சூர்யாசுரேஷ், யோகாபாண்டியன், ஓவியர் சித்ரகலாரவி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எதிர்வரும் 30.11.2022 அன்று நடைபெறும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பாராளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா மற்றும் அழ.வள்ளியப்பாவின் குடும்பத்தினர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படும் என வாசகர் பேரவை தலைவர் பேராசிரியர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top