Close
செப்டம்பர் 19, 2024 10:54 மணி

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை

புதுக்கோட்டை

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அகல் விளக்கை வாங்கும் பொதுமக்கள்

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது.

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை தீப விழா வருகிற 6- ஆம் தேதி (டிசம்பர்) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அனைவரும் வீடுகள் முழுவதும் அகல்விளக்கு தீபம் ஏற்றுவார்கள். இதையொட்டி புதுக்கோட்டையில் அகல் விளக்குகள் சாந்தநாத சாமி கோவிலின் அருகிலுள்ள ஜி. டி. என். பூஜை பொருட்கள் கடையில் விற்பனை தொடங்கி உள்ளது.

பல வித வண்ணங்களில் விதவிதமான வகையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரில் பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அகல் விளக்குகள் பலவித வண்ணங்களில் ரூ.10 முதல் ரூ.50  ரூ.100 ரூ. 200    வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கார்த்திகை தீப விழாவை யொட்டி அகல் விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். பல்வேறு வண்ண வடிவிலான அகல்விளக்குகள் பொதுமக்களை பெரிதும் கவருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top