Close
செப்டம்பர் 20, 2024 4:07 காலை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்… புதுக்கோட்டை அதிமுக(ஓபிஎஸ்) சார்பில் மலரஞ்சலி

புதுக்கோட்டை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி. புதுக்கோட்டை அதிமுக(ஓபிஎஸ்) சார்பில் அவரது உருவப்படத்துக்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் உள்ள அதிமுக (ஓபிஎஸ்) மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த  ஜெ ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு   வடக்கு மாவட்ட செயலாளர் இராஜ.ராஜசேகரன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் ராம. சந்தானம் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் செழியன், அதிமுக முன்னோடி புலவர். ராஜேந்திரன் மற்றும் நகர,  ஒன்றிய, வட்ட, செயலாளர்கள் பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top