Close
செப்டம்பர் 20, 2024 5:48 காலை

புதுக்கோட்டையில்    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி    களைக்கட்டும் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை.. 

புதுக்கோட்டை

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புதுகை பூரணி அங்காடியில் விற்பனைக்கு வந்துள்ள கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள்

புதுக்கோட்டையில்    கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி     கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை களைக்கட்டியுள்ளது.

கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள் ளன. குடில்கள் அமைக்க தேவையான பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.மக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப் படுகிறது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும், பள்ளிக ளிலும், அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.

மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் குழந்தை ஏசு, ஆட்டு மந்தை, தேவதூதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெறும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கட்டி தொங்க விடுவார்கள்.

நகரில் பிருந்தாவனம் வடக்குராஜவீதி பூரணி அழைப்பிதழ் உலகம் மேலும் கீழ ராஐ  வீதி பெரிய கடைத்தெரு,ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சாதாரண ஸ்டார்கள் ரூ.10 முதல் ரூ.500 வரையில் விற்கப் படுகிறது. வால் ஸ்டார்கள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர எல்.இ.டி. விளக்கு களால் ஆன ஸ்டார் ரூ.150 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக காகித எல்.இ.டி. விளக்குகளால் ஆன ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது  50-க்கும் மேற்பட்ட வகையான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குடில் செட் ரூ 300 முதல் ரூ.1000 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ் மரம் 1 அடி முதல் 8 அடி உயரம் வரை உள்ளது. மரத்துடன் பால், பெல், ஏசு கிறிஸ்து மற்றும் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

இதே போல் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் ரூ.500 முதல் ரூ. ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர எல்.இ.டி. விளக்குகள், அலங்கார தோரணங்கள், புது வகை கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளும் விற்பனைக்காக வந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கால் கிறிஸ்துமஸ் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடமல் இருந்த மக்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை விமரிசையாக கொண்டாட இருப்பதால் ஆர்வத்தோடு ஸ்டார்ஸ் மற்றும் குடில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

புதுக்கோட்டை
கிறிஸ்துமஸ்

புதுவிதமான மாடல்களை கேரளா மற்றும் சைனா வில் இருந்து இறக்குமதி செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரமும் அதிக அளவில் நடைபெறு வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், வாழ்வின் கொண்டாட் டத்திற்கும் இது போன்ற பண்டிகைகள் எப்போதும் தேவை. அந்த வகையில் எல்லோரிடைய வாழ்விலும் இந்த கிறிஸ்துமஸ் ஒளியேற்றும் என நம்புவோம் என்று பூரணி அழைப்பிதழ் உலகம்  கடை உரிமையாளர் சங்கர் கூறினார்.

குறிப்பாக ஏசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது என்பதால், அதை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர் கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

இதில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்துக் கொள்வார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

அதன்படி, பல கவர்ச்சியான வண்ணங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார்கள்  கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவைகளை அமைத்து வருகின்றனர். கிறிஸ்து மஸ் பண்டிகையை கோலாகலமாக மகிழ்ச்சியுடன் கொண் டாட  கிறிஸ்தவர்கள் தயாராகி விட்டார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top