Close
செப்டம்பர் 20, 2024 6:32 காலை

எம்ஜிஆர் நினைவு நாள்… புதுக்கோட்டையில் உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மரியாதை செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின்  35 -ஆம்  ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில் அமைதி ஊர்வலம் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.

இதையடுத்து, பார்வையற்றோர் பள்ளி காதுகேளாதார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் இனிப்புகள் வழங்கினர். பழைய பேருந்து நிலையம் அருகில் ஏழை எளிய 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் மாவட்ட  செயலாளர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ, மாவட்ட பொருளர் வி.சி. ராமையா,  முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன், நகரச் செயலாளர்க. பாஸ்கர். அவைத் தலைவர் வீ.ராமசாமி, நிர்வாகிகள் பழனிவேலு,  பாசறை கருப்பையா, தாரணி உதயகுமார், ஜீவாசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில்  எம்ஜிஆர் நினைவு நாள்:

வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப் பாளர் கழகப் பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்  ஆணைக்கிணங்க,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜே. ராஜசேகரன் அறிவுறுத்தலின்படி 24.12.2022 எம்.ஜி.ஆரின்  35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

புதுக்கோட்டை
எம்ஜிஆர்  படத்துக்கு  மாலை அணிவித்த அதிமுக(ஓபிஎஸ்)வினர்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு   அவை தலைவர் சந்தானம் தலைமையில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யாப்பட்டது

இதில்,  புலவர் ராஜேந்திரன், சந்தானம், வழக்கறிஞர்  முத்தையன், நிர்வாகிகள் செழியன், சீனிவாசன், மகேந்திரன் மாரிமுத்து, கண்ணதாஸ், ஸ்ரீதர், சரவணன், ரமேஷ், திருமுருகன், மூர்த்தி, மோகன்தாஸ், நரேன், கிளிக்குடிசுப்பிரமணியன், ராப்பூசல் முனியாண்டி, சோலை மணி, புஷ்பராஜ்.

பாலசுப்பிரமணியன், செந்தில்குமார், தாயத்து கணேஷ், பொதுக்குழு பழனி,டைலர் சுப்பையா, எம்ஜிஆர் மன்ற சந்தானம், சதாசிவம், மகளிர் அணி செல்வி, தாமஸ், வாப்பா மைதீன், பழக்கடை பாஸ்கர், விவசாய அணி ராமசாமி, அப்துல்லா, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி அன்னதானம் நடைபெற்றது

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்:

புதுக்கோட்டை
எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்த அமமுகவினர்

எம்.ஜி.ஆர்  நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர்  டிடிவி. தினகரன்  ஆணைக்கிணங்க புதுக்கோட்டை நகரக் கழகம் சார்பில், புதுக்கோட்டை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் ஏ.வீரமணி அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் முத்தாள் (எ) எம்.ஆர்.முத்துக்குமார் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top