Close
செப்டம்பர் 20, 2024 7:01 காலை

கோபி ஈகிள் ஜிம் சார்பில் மாநில பளுதூக்கும் போட்டியில் வென்றவர்களுக்கு கே.ஏ. செங்கோட்டையன் பரிசளிப்பு

ஈரோடு

கோபியில் நடந்த மாநில பளு தூக்கும் போட்டியில் வென்றவருக்கு பரிசளித்த முன்னாள் அமைச்சர் கே..ஏ. செங்கோட்டையன்

கோபி ஈகிள் ஜிம்- கோயம்புத்தூர் அமைஞ்சூர் பவர் லிப்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி கோபியில் நடந்தது.

இதில் 18 வயதுக்கு கீழ் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து 350 -க்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பிரினியோ கணேஷ், முத்து ரமணன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஸ்ரீ முருகன் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top