Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு

பெருந்துறையில் நடந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடா சலம்  பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் சொந்த நிதியில் இருந்து சுமார் 85 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வகைகள் அடங்கியுள்ள ஒரு மளிகை தொகுப்பு வழங்கினார்.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்க பெருந்துறை ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சுரேஷ்குமார், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top