Close
செப்டம்பர் 20, 2024 7:07 காலை

மணலி புதுநகர் குழந்தை இயேசு ஆலய 43 வது ஆண்டு பெருவிழா

சென்னை

சென்னை மணலி குழந்தை ஏசு ஆலயத்தின் பெருவிழா கொடியேற்றம்

சென்னை மணலி புதுநகர் குழந்தை இயேசு ஆலய 43 -ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சென்னை மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்தின் 43 -ஆவது ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மணலி புதுநகரில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் தொடங்கப்பட்டு 43 -ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத் துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மறை மாவட்ட பேராயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  தினந்தோறும் முக்கிய தேவாலயங்களை பொறுப்பேற்று நடத்தும் பேராயர்கள் வெவ்வேறு தலைப்பு களில் சிறப்பு அருளுரை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து 10 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இதில் பேராயர்கள் ஜார்ஜ் அந்தோணிசாமி, வின்சென்ட் சின்னதுரை, ரெஸ்பாண்ட் பீட்டர், ஒய்.எப். போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். ஜன.8-ஆம் தேதி குழந்தை இயேசு ஆசீர்வாத பெருவிழா நிகழ்ச்சியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா முடிவுக்கு வரும் என தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top