Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகள்

புதுக்கோட்டை

ஜனவரி முதல் தேதியில் பிறந்து ஜனவரி 1 -ல் பள்ளிக்குவந்த மாணவர்களுக்கு பரிசளித்த கவிஞர் தங்கம்மூர்த்தி

வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்புபரிசு அளிக்கப்பட்டது,

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்த குழந்தைகள் ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்தால் (எந்தபள்ளியில் படிப்பவர் எனினும்) சிறப்புபரிசுகள் உண்டு என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி, அரசு, அரசுஉதவி பெறும் மற்றும் பல்வேறு தனியார் பள்ளியில் பயிலும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் பாலமுருகன், நீரஜா, சுபஸ்ரீ, அட்சயா, பீரித்திக்கா ஆகிய குழந்தைகள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவிதங்கம் மூர்த்தி ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கு ஒரு சில்வர் தட்டு நிறைய புத்தகங்கள் வைத்து புத்தகத்தட்டு வழங்கப்பட்டது.

சாக்லேட்டுகள்,கேக்குகள் போன்ற இனிப்புகளும் வழங்கினர். இந்தவிழாவில் பள்ளியின் மேலாண்மை இயக்குநர்நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் நாகாஅதியன், அரசுசிறப்பு வழக்கறிஞர் எம்.செந்தில்குமார், பேராசிரியர்கள் அய்யாவு, கருப்பையா, ஆர்.எஸ்.காசிநாதன், மகாத்மாரவி, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, பவானி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top