Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில்  மார்கழி மாத பிரபஞ்சம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதி ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில் மார்கழி மாத பிரபஞ்சம்

புதுக்கோட்டை தெற்கு நான்காம்   வீதி ஆஞ்சநேயர் கோவிலில்அனுமன் திருச்சபை சார்பில்  மார்கழி மாத பிரபஞ்சம்  நடைபெற்றது .                                                                                                                                                                                                                புதுக்கோட்டை தெற்கு நான்காம்  வீதி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில்  மார்கழி மாத பிரபஞ்சம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது மார்கழி மாதம் 30 நாட்க ளிலும் தினமும்  மாலை 6 மணி முதல் 8மணி வரை  பொங்கல் பண்டிகை வரை  திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினரான ஸ்ரீநிவாசசுந்தர ராஜன் அவர்களுடைய பிரபஞ்சம்  நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு சிறுவர் சிறுமியர்கள் மாணவ-மாணவியர் மற்றும் ஆன்மிக பாடகர்கள் ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள் திருப்பதி ஏழுமலையான் பக்தி பாடல்கள் உள்ளிட்ட கர்நாடக இசைபாடல்களும் பாடினார்கள்.

ஸ்ரீநிவாச சுந்தர்ராஜன் பிரபஞ்சத்தில் பக்தி சொற்பொழிவு வழங்கினார்.  ஏற்பாடுகளை  அனுமன் திருச்சபை சார்பில் நிர்வாகி ஆனந்தன் மற்றும் மணிக்குருக்கள் செய்தனர் கோவிலில் ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது   இந்த நிகழ்வில்     பக்தர்கள்  திரளாக வருகை தந்து  கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top