Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

தை அமாவாசை… ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி திருவீதியுலா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் தை அமாவாசை யை முன்னிட்டு சிறப்பு பூஜை, சாமி வீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச் சபையினர் சார்பில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு  பூஜை  நடைபெற்றது.

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில்  தை  அமாவாசை சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.
கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில்  தீபாராதனையை  சிவாச்சாரியார் கே.மணி குருக்கள் நடத்தி வைத்தார்.  பூஜை  நடந்தது.

நிகழ்வில் திரளான  பக்தர்கள்  வருகைதந்து சுவாமியை   வழிபட்டனர்.  பின்னர் அனைவருக்கும்   பிரசாதம் வழங்கப்பட்டது.    மாலையில் உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில்  பக்தர்கள் வடம் பிடித்து பல்வேறு வீதி வழியாக வலம் வந்தனர் . ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top