Close
செப்டம்பர் 20, 2024 6:23 காலை

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான   திறமை தேடல் போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான தனித் திறமைகளின் தேடல்போட்டி நடைபெற்றது

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தை களுக்கான   திறமைகளின் தேடல் போட்டி நடந்தது.
புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான   தனித் திறமை களின் தேடல் போட்டி,  கலைபோட்டி,  விளையாட்டுப் போட்டி,   மாறுவேடப் போட்டிகள்   இரு நாள்கள்  நடைபெற்றது.

நிகழ்விற்கு  பள்ளியின் தாளாளர் கவிஞர்  ஆர்.எம்.வீ.  கதிரேசன் தலைமை வகித்து    போட்டிகளை முன்னின்று நடத்தி வைத்தார்.

போட்டிகளில்  மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள்  போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது  திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

நடுவர்களாக .வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் விஸ்வநாதன்  கவிகல்லூரி பேராசிரியர்கள்   உமா, செல்லப்பன், கவிஞர்கள்  பீர்முகமது,  கண்ணன், புதுகை புதல்வன், டெய்சிராணி, சக்திபாலன், ஜனார்த்தனன், ஜெயலெட்சுமி ஆகியோர்  போட்டியாளர்களுக்கு மதிப்பெண் வழங்கினர்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட   நகர்மன்ற உறுப்பினர் வளர்மதிசாத்தையா  வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் நற்சான்றிதழ்களை  பள்ளியின் தாளாளர் கவிஞர்  ஆர்.எம்.வீ.  கதிரேசன் வழங்கினார்.

பல்வேறு பள்ளிகளின் அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றனர்.   குழந்தைகளின் ஆசிரியைகள், மாணவ , மாணவிகள்.பெற்றோர்கள், இந்திய மருத்துவ சங்கத்தின்  நிதி செயலாளர்    மருத்துவர் கோபாலகிருஷ்ணன், யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி பெற்றோர்கள் உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.

விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்தனர்.  முன்னதாக பள்ளியின் சென்டர் ஹெட் தேவி கீர்த்தனா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக  பள்ளியின் ஆலோசகர் கலைச்செல்விகதிரேசன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top