Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு நாள் விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா

ஸ்ரீ வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில்74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் கவிஞர்அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி தலைமை வகித்து தேசியகொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அவர்பேசும் போது“சுதந்திரதினம் என்பது அந்நியர்களிடம் போராடி விடுதலைபெற்ற தினம் ,குடியரசுதினம் என்பது நமக்கான உரிமை அதுவரையறுக்கப்பட்டது போன்ற வரலாற்று காரணங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

புதுக்கோட்டை

பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ஆசிரியர்கள் சுதா மற்றும் உதயகுமார் குடியரசுதின செய்திகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொண்டனர்.

பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஆசிரியை பவானி வரவேற்றார். நிறைவாக பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழாசிரியர்கணியன் செல்வராஜ் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சுவேதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top