Close
செப்டம்பர் 20, 2024 7:03 காலை

புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில்   மாறுவேடப் போட்டிகள்

புதுக்கோட்டை

புதுகை குளத்தூர் மகாத்மா மழலையர் பள்ளியில் நடைபெற்ற மாறு வேடப்போட்டி

புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில்    மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை  குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில்  மாறுவேடப் போட்டி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டி,ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியை சுஹாசினி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் குழந்தைகள் மாணவ மாணவியர்கள்    தனித் திறமைகளாக    தேச தலைவர்கள் மகாத்மா காந்தி பாரதியார்  சுபாஸ்சந்திரபோஸ்,  மருத்துவர், கலெக்டர், காவல்துறை அதிகாரி, ஆசிரியர் மற்றும் சிவபெருமான், முருகன், கருப்பர், கிருஷ்ணன், ராதை  விவசாயி உள்ளிட்ட   வேடமணிந்தும்  விண்வெளி, 108 ஆம்புலன்ஸ், செல்போன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கமளித்தும் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது  திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

புதுக்கோட்டை

நடுவார்களாக  கல்வியாளர்கள் பழனிச்சாமி,  சித்தார்த்தன் ,தனலெட்சுமி  , பிரசாந்தி,   பேலஸ் சிட்டி ரோட்டரி ராஜேந்திரன் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் வழங்கி தேர்வு செய்தனர்  . போட்டியில் பங்கு பெற்ற   அனைத்து மழலையர்கள் , மாணவர்களுக்கும்  நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

ஆசிரியைகள் சத்யா, சுஹாசினி, ரம்யா, வித்யா, புவனேஸ்வரி, சண்முகபிரியா, சுபத்திரை, கேசனவள்ளி , புவனேஸ்வரி  மற்றும்   மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள்   உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.

விழா  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சிறப்புடன் செய்தனர் நிறைவாக  பள்ளியின் ஆசிரியை சுபத்திரை நன்றிகூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top