Close
அக்டோபர் 5, 2024 9:54 மணி

பொற்பனைக்கோட்டை   பொற்பனை முனீஸ்வரர் கோயிலில்  சிறப்பு  வழிபாடு

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர்

பொற்பனைக்கோட்டை    பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தில்  சிறப்பு  வழிபாடு நடந்தது.
புதுக்கோட்டை அருகிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த  பொற்பனைக் கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை  யொட்டி     பொற்பனை முனீஸ்வரருக்கு சிறப்பு  வழிபாடு நடந்தது.
முனீஸ்வரருக்கு  பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி அங்கியுடன் ருத்திராட்சமாலை  ஏலக்காய் மாலை  மற்றும் மலர் அலங்காரத்துடன்  தீபாராதனை  நடந்தது.
ஏற்பாடுகளை  பழனியப்பன் பூசாரி தலைமையில் பூஜகர்கள் செய்திருந்தனர்.   இதில்    ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர் . பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top