Close
செப்டம்பர் 20, 2024 6:41 காலை

சிவகங்கையில் பிப்.13 ல் தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

சிவகங்கை

சிவகங்கையில் தொழில் பழகுநருக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது

தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா  வரும் திங்கள்கிழமை(பிப்.13) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக் கான மாவட்ட அளவிலான ,சிறப்பு மேளா 13.02.2023 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், முத்துப்பட்டி,. சிவகங்கையில் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த தொழிற் பழகுநர் பயிற்சி மேளாவில் மாநில அரசு நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கையினை நடத்த உள்ளனர்.

மேலும், இந்த தொழிற் பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்களும் கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம்.இந்த மேளாவில், பயிற்சிக்கு மற்றும் பயிற்சி பெற்று முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் மேலும்,  படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 04575-290625 என்ற எண்ணிற்கும் அல்லது 9499055781 என்ற அலைபேசிக்கும் அல்லது உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலக முதல் மாடி, சிவகங்கை என்ற முகவரியிலும்  தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தெரிவித் துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top